தேகப் பொலிவுக்குத் தினமும் கற்றாழை!

'கத்தாழைக் கண்ணாலே குத்தாதே’ பாடலைக் கேட்டவுடனே ஒரு குத்தாட்டம் போடவேண்டும் என்று எல்லோருக்குமே தோன்றும். கற்றாழை, நீர்நிலை இல்லாத இடங்களிலும் வளரும் மருத்துவக் குணம் கொண்ட மகத்தான தாவரம். கற்றாழையின் எல்லையில்லா பயன்களைப் பற்றி, சித்த மருத்துவர் நந்தினி சுப்ரமணியம் சொல்வதைப் படித்தால், அது உங்களுக்கே புரியும். 


எல்லோருக்கும் ஏற்ற எளிமையான, எல்லாவிதமான சத்துகளும் ஒருங்கே கொண்டது கற்றாழை. உரிய வயதில், பூப்பெய்தாத பெண்களுக்குக் கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் 'மூசாம்பர மெழுகை’க் கொடு்த்தால் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகரித்துப் பூப்பெய்தல் எளிதாகும். வைட்டமின் ஏ, சி, இ மற்றும் வைட்டமின் பி1, பி6, பி12 இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். உடலுக்குத் தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் கால்சியம், பொட்டாசியம், இரும்பு உள்ளிட்ட தாது உப்புக்கள் இருப்பதால் வளர் இளம் பருவத்தினருக்குத் தாராளமாகக் கொடுக்கலாம். கற்றாழையைத் தினமும் எடுத்துக்கொண்டால், தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் ஸ்லிம் ஆகும். 


நெஞ்செரிச்சல், சர்க்கரை நோய், அல்சர், தைராய்டு, சோரியாசிஸ், சீரற்ற ரத்த ஓட்டம் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் கற்றாழையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும். மூட்டு வலி, கழுத்து வலியின்போது வலி ஏற்பட்ட இடத்தில் கற்றாழையை நீீளவாக்கில் வெட்டி சூடு செய்து, பற்றுப் போடுவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும். 


கற்றாழையில், 'ஆன்டிமைக்ரொபியல்’ (Antimicrobial) என்ற ரசாயனம் இருப்பதால், அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இதன் ஜெல்லை முகத்தில் தொடர்ந்து பூசுவதன் மூலம் இளம் வயதில் உண்டாகும் தோல் சுருக்கம் மறைந்து அழகு கூடும். அதிக நேரம் வெயிலில் அலைபவர்கள், முகத்தில் பூசி வந்தால், கருமை, கரும்புள்ளி ஏற்படாமல் காக்கும். 


கற்றாழைச் சாற்றைத் தலையில் தடவி 10 நிமிடம் ஊறவைத்துக் குளித்தால், பேன், பொடுகு நீங்கும். ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், தேனுடன் இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால், ஆஸ்துமா விரைவில் குணமாகும். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் இதைக் கொடுக்கக் கூடாது. காரணம், உடலில் குளிர்ச்சியை அதிகப்படுத்திவிடும். மேலும், கர்ப்பிணிப் பெண்கள் கற்றாழையை உண்ணாமல், வெளிப்புறம் மட்டும் பயன்படுத்தலாம்.'கற்றாழை, நமக்கு இயற்கை கொடுத்த இனிய அன்பளிப்பு!


களைப்பைப் போக்கும் கற்றாழை! 

சென்னை கே.கே.நகர் சிவன் பார்க் எதிரில், காலை 5 மணி முதல் 9 மணி வரை வாக்கிங் செல்வோர் கற்றாழை ஜூஸ் விரும்பி அருந்துகின்றனர். 'நடந்த களைப்பை போக்கி, மேலும் நடப்பதற்கான தெம்பைத் தருகிறது கற்றாழை’ என்கின்றனர். கற்றாழை ஜூஸ் விற்கும் ராஜ்குமார் மற்றும் விஜய்யிடம் கற்றாழை ஜூஸ் செய்வது பற்றிக் கேட்டோம். 

கிட்டத்தட்ட 300 வகையான கற்றாழைகள் உலக அளவில் இருந்தாலும் பரவலாகப் பயன்படுவது, சோற்றுக் கற்றாழையும், செங்கற்றாழையும்தான். கற்றாழையின் அனைத்துப் பகுதிகளுமே பலன் தரக்கூடியவை. கற்றாழையுடன் சர்க்கரை, ஐஸ் கட்டி, சாதாரண உப்பு போன்றவற்றைக் கலந்து சாப்பிடக் கூடாது. கற்றாழை ஜூஸ் தயாரிப்பது மிக மிக எளிது!

தேவையான பொருட்கள்: கற்றாழை ஒரு கப், கருப்பு உப்பு (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) தேவையான அளவு, மோர் ஒரு செம்பு, தயிர் ஒரு கப்.

செய்யும் முறை: சோற்றுக் கற்றாழையின் மேல் தோலை நீக்கி குறைந்தது ஏழு முறை அதன் வழுவழுப்புத்தன்மை மற்றும் கசப்புத்தன்மை நீங்கும் வரை சாதாரண நீரில் கழுவ வேண்டும். பிறகு, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இதனுடன் மோர், தயிர், தேவையான அளவு கருப்பு உப்பு சேர்த்து மத்தால் கடைந்தால் கற்றாழை ஜூஸ் ரெடி!

புற்றுநோய்க்கு... மருந்தாகும் மசாலா பொருட்கள்!

புற்றுநோய்க்கு... மருந்தாகும் மசாலா பொருட்கள்!

மஞ்சள்:-
இதில் உள்ள 'குர்குமின்’ (Curcumin) என்ற வேதிப் பொருள் புற்று செல்லை தடுக்கும் தன்மைகொண்டது. செல்களில் வீக்கம் அல்லது அழற்சி ஏற்படாமல் தடுக்கும் (Anti inflammatory effect) ஆற்றலும் மஞ்சளுக்கு உண்டு. தொடர்ந்து மஞ்சளைப் பயன்படுத்தும்போது புற்று செல் உருவாகும் தன்மையைக் குறைக்கும். புற்றுநோய் வளர்ச்சி மேலும் தூண்டப்படுவதைத் தடுக்கும். காயங்களை ஆற்றவும், அனைத்து விதமான தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படும். பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.

குங்குமப்பூ:-
குங்குமப்பூ தொண்டை நோய்களுக்குச் சிறந்த மருந்து. முக்கியமாக இதுவும் புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. 'கீமோதெரப்பி’ (Chemo Therapy), ரேடியேஷன் தெரப்பி (Radiation therapy) எடுத்தவர்களுக்கு அதன் பக்க விளைவுகளைத் தடுப்பதற்குக் குங்குமப்பூ பக்கபலமாக இருக்கிறது. இந்திய, அரேபிய, சீனக் கலாசாரங்களில் இது உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இஞ்சி:-
இஞ்சி இல்லாத சமையலே இல்லை. இஞ்சியை வெறும் சுவை, மணத்துக்காக மட்டும் சேர்ப்பது இல்லை. ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே, முந்தைய நாள் செய்த கத்தரிக்காய் குழம்பு முதல் சாம்பார் வரை கெட்டுப்போகாமல் இருப்பதற்குக் காரணமே, இஞ்சி சேர்ப்பதுதான். இஞ்சி ஓர் இயற்கையான பதப்படுத்தும் (preservative) பொருள். பசியைத் தூண்டும். கபத்தைத் தணிக்கக்கூடியது என்பதால்தான் சளி, இருமல் போன்றவற்றுக்கு இஞ்சிக் கஷாயம் தரப்படுகிறது. இஞ்சியை ஆயுர்வேதத்தில் 'ஆர்த்ரகம்’ என்று சொல்வார்கள். 7-ஆம் நூற்றாண்டிலேயே புற்றுநோய்க்கு 'ஆர்த்ரக ரசாயனம்’ என்ற முறை ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குடல், ஆசனவாய், சினைப்பை புற்றுநோய்க்கு இது மருந்தாகப் பயன்படும். குறிப்பாகச் சினைப்பை புற்றுநோய்க்கு மிகவும் சிறந்தது.

சீரகம்:-
உடலைச் சீராக வைக்கக்கூடிய ஆற்றல் உள்ளதால்தான், இதை சீரகம் என்கிறார்கள். செரிமான சக்தியை அதிகரிப்பது, வாத நோய்களைக் கட்டுப்படுத்துவது, குன்மம் என்ற கட்டிகளைக் குணப்படுத்துவது போன்ற மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. இதில் உள்ள 'தைமோக்யூனைன்’ (Thymoquinone) என்ற வேதிப் பொருள், புற்று நோய்க்கு எதிராகச் செயல்படக்கூடியது. புற்றுநோய் உருவாகக் காரணமாய் இருக்கும் திசுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாகச் சிறுநீரகப் புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க, இதன் செயல்பாடு குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபட்டுவருகின்றன. கணையத்தில் உள்ள 'பீட்டா’ (Beta) செல்களைப் பாதுகாக்கிறது. வெறும் சீரகத் தண்ணீரை தினமும் குடித்தால்கூடப் போதும். உடலுக்கும் தொண்டைக்கும் நல்லது.

பூண்டு:-
உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் தன்மை இதற்கு உண்டு. இதய நோய்க்குச் சிறந்தது. குறிப்பாக, இது மார்பகப் புற்றுநோயைத் தடுக்கிறது. கட்டிகளின்
வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. புற்றுச் செல்களை அழிக்கிறது. வயிற்றில் புற்றுநோய் வரக் காரணமாக இருக்கும் 'ஹெலிகோபேக்டர் பைலோரி’ என்ற பாக்டீரியாவை அழிக்கும் ஆற்றல் பூண்டில் உள்ளது. மேலும், லுகேமியா என்னும் ரத்தப் புற்றுச் செல்களை அழிக்கிறது. பூண்டை, தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்

இதயத்தில் அடைப்பு உள்ளதா?

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Related Posts Plugin for WordPress, Blogger...